சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28) போலீஸ் விசாரணையின்போது கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சிபிஐ தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு நவ.19-க்கு தள்ளி வைக்கப்பட்டது.




