இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பல உணவுகளை தனக்கு பிடித்தவாறு சாப்பிட்டுவிட்டு அஜீரண கோளாறால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக சத்தான உணவு முறையையும் நேரத்தையும் பின்பற்றாததே இந்த அஜீரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும், அஜீரணத்தை நாம் எவ்வாறு வீட்டில் உள்ளபடியே சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒரு சில பொருட்களை எல்லாம் சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். குறிப்பாக, மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றால் நன்றாக பால் அருந்த வேண்டும் இவ்வாறு நாம் அருந்தினால் அஜீரணத்திலிருந்து தப்பிக்கலாம். பால் சாப்பிட்ட அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சம் சாறு பருக வேண்டும். எலுமிச்சை சாறுக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ் கூட பருகலாம். கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெண்ணீர் அருந்த வேண்டும். தேங்காய் சிலருக்கு ஒத்துக்காது. ஒரு சிலருக்கு தேங்காய் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும் அப்போது சிறிது அரிசியை எடுத்து மென்று தின்றால் இந்த அஜீரணம் சரியாகும். பருப்பு சாப்பிடுபவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பருப்பு சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் சிறிது சர்க்கரை சாப்பிட்டால் உடனே சரியாகிவிடும். பப்பாளி பழம் அதிகமாக சாப்பிட்ட அஜீரணம் ஏற்பட்டால் தாராளமாக தண்ணீர் அருந்தினால் இந்த அஜீரணம் சரியாகிவிடும்.




