
ஆந்திர மாநிலத்தில் நண்பர்களை போதை விருந்துக்கு அழைத்து அவருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கணவன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சார்ந்த அகிலேஷ் என்பவர் போதை விருந்திற்காக தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உள்ளார், அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து போதை மருந்துகளை பயன்படுத்தி தனது மனைவியை கொடுமை செய்து உள்ளார்.
மேலும் அவரது நண்பர்களும் மனைவியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட போது அதற்கு உறுதுணையாய் இருந்து உள்ளார். இதனை தொடர்ந்து அவரது மனைவி அளித்த புகாரியின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் பின் அகிலேஷ் மற்றும் அவரது சகோதரனை கைது செய்து உள்ளனர்.
நாட்டில் போதை மருந்து கலாச்சாரம் தலை தூக்கி இருக்கும் நிலையில் ஐடி ஊழியர்கள் பெண்களிடம் பாலியல் அத்துமீறில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவற்றை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.