அடிக்கடி கை, கால் மரத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா..??
நம்மில் பலருக்கும் அடிக்கடி கை கால் மரத்துப்போகும். இந்தப் பிரச்சனை எதனால் வருகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அடிக்கடி கை கால் மரத்து போவதற்கு காரணம் ரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி மற்றும் தசைப் பிடிப்பு மற்றும் உணர்வின்மை செரிமான பிரச்சனைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். எனினும் ஒரு சில உணவுகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய ஒருவர் செய்ய வேண்டிய சில பயனுள்ள உணவு மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மீனில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும். அவை ரத்தக்குழாய்களை ரத்த கட்டிகளிலிருந்து தடுக்கின்றன. அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை இது பராமரிக்கிறது. ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம் கானாங்கெளுத்தி சூரை மற்றும் ட்ராவிட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன.




