மகாராஷ்டிரா மாநிலம் வாசி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று (அக்.21) நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், உறங்கி கொண்டிருந்த 2 பெண்கள், ஒரு 6 வயது குழந்தை உட்பட மொத்தம் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து நவி மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




