கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்குட்டத்தில், பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நேற்று (ஜன.10) நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவரை சுற்றி வளைத்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர் மீது 2 பாலியல் புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், இது அவர் மீதான 3-வது குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.




