தேவையான பொருள்: வில்வ இலை 5 எண்ணம் அண்ணாச்சி பழம் 100 கிராம் அமுக்கரா கிழங்கு பொடி 5 கிராம் பாதாம் பருப்பு 5 எண்ணம் செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் சீவிய அண்ணாச்சி பழத்தை 100 கிராம் எடுத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் வில்வ இலை எடுத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் 5 கிராம் அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் நன்றாக இடித்து எடுத்துக்கொண்ட பாதாம் பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான அமுதம் சுவை தரக்கூடிய சாற்றை தினமும் காலை நேரங்களில் குடித்து வந்தால் ஆண்களின் அணுக்கள் அதிகரித்து அணுக்கள் கட்டி தன்மை பெறும்.