அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்..!!வேட்புமனுவை தாக்கல் செய்த இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் தன்னுடைய வேட்புமனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20ஆம் தேதி நடக்கிறது.

Read Previous

கொரோனாவின் பிறப்பு பற்றிய பரபரப்பான உண்மைகள்..!!

Read Next

3 மாதக் குழந்தை கடத்தல் பெண் உட்பட இருவர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular