
சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…!
கள்ளக்குறிச்சியில் அண்மையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் அதிமுக அமைச்சருகும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழாவில் பேசுகையில் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும் திமுக பற்றியும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தனது கையாளாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டினார். மேலும், இதற்கு முன்னர் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இந்த இடைத்தேர்தலிலும் சின்னத்தை முடக்க அவர் முயற்சித்து வருகிறார் என கருத்து தெரிவித்தார்.
மேலும் திமுக பற்றி கூறுகையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியானது, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு அணிகளாக பிரித்தது போல, திமுகவிலும் ஒரு பிரிவு ஏற்படும். அங்கு ஏக்நாத் ஷிண்டே போல, அது கனிமொழியாகவோ அல்லது துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்றும் தனது விமர்சனத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.