
கோயமுத்தூரில் பத்து வருடங்களாக குப்பைகளை வெளியே போடாமல் வீட்டில் வைத்திருந்த நிலையில் தூய்மை பணியாளர்களால் அந்த வீட்டிலிருந்து மூன்று டன் குப்பைகள் ஒரே நாளில் அகற்றப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம்நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இங்கு முதல் தலத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயதான மூதாட்டையும் அவருடைய மகள் (40 வயது) இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்தும் சாப்பிட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மனநலம் சரியில்லை என்றும் அரசல் புரசலாக கூறப்படுகிறது.
இதன்பிறகு வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே போடாமல் ஆங்காங்கே சேகரித்து வைத்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வைத்து கோவை மாநகராட்சி நிர்வாகம் அவர்களின் வீட்டில் உள்ள கழிவுகளை அகற்றுமாறு உத்தரவிட்ட நிலையில் தூய்மை பணியாளர்கள் 25 பேர் சம்பந்தப்பட்டு வீட்டிற்கு சென்றனர். அங்கு துர்நாற்றம் அதிகமாக வீசியதால் அவர்கள் முகமூடி அணிந்து கொண்ட அங்குள்ள குப்பைகளை அகற்றினர்.
இந்நிலையில் அவர்களிடம் மூதாட்டி தவறாது செய்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்து அவர்களின் வீட்டிலிருந்து மொத்தம் மூன்று டன் குப்பைகளை அகற்றியுள்ளனர். இந்த குப்பைகளை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டு தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்து வாகனம் மூலமாக எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக இவ்வளவு வருடங்களாக அக்கம் பக்கத்தினர் ஏன் இந்த தகவலை சொல்லவில்லை என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.