• September 29, 2023

அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி ஓட்டுநர் பலி; தீப்பிடித்து நொடியில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ உள்ளே.!!

ஆந்திர மாநிலத்தில் அதி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.அங்கிருந்து இளைஞர்கள் துரிதமாய் செயல்பட்டு ஆம்புலன்சில் இருந்த ஓட்டுனரின் உடலினை மீட்டுள்ளனர், இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஹைதராபாத் பிஎன் ரெட்டி நகர் பகுதியில் நேற்று இரவு ஆம்புலன்ஸ் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி தீப்பற்றி எரிந்த நிலையில் இடிபாடுகள் சிக்கிய ஓட்டுனரின் உடலை அப்பகுதி இளைஞர்கள் துரிதமாய் செயல்பட்டு மீட்டு உள்ளனர்.

இளைஞர்கள் சிலர் ஆம்புலன்ஸில் இருந்து சில அடி தூரத்தில் நின்று கொண்டு இருந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் மீட்பு பணிக்கு வந்த இளைஞர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் நோயாளியை இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த வழியில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது.அதி வேகத்தின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் உறுதியாகியுள்ளது.

Read Previous

கொடூரம்.. எலியை பிடித்து பைக்கில் கட்டி இளைஞர் செய்த காரியம்… வைரலாய் பரவும் வீடியோ.!!

Read Next

ஓரினசேர்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுக்க அதிரடி தடை; ஆப்படித்த சீனா., சோகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular