அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு..!! வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுவது மட்டுமே..!!

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

 

#வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு

போடுவது மட்டுமே*

 

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

 

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

 

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

 

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்

கூட அதில் அடங்கி இருக்கும்.

 

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

 

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு

தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

 

பொதுவாக வெற்றிலை பாக்கு

சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்

சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

 

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்

சொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,

பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

 

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்

அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து

நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

 

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

 

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

 

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை

போக்கவல்லது.

 

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை

நீக்கி விடும்.

 

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்

என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

 

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

 

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்

இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

 

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

 

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

 

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்

புகையிலை கிடையாது.

 

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட

தீய பழக்கமாகும்.

 

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய

அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

 

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

 

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே

மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

 

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

 

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு

குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

 

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட

நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

 

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்

தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

 

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்

அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

 

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

 

இரவில் வெற்றிலையை அதிகமாக

எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்

தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

 

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

 

வாழ்க….நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே…..!

Read Previous

வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் மட்டும் போதும்..!! ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்கும்.!!

Read Next

வில்வ இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular