
Oplus_131072
மற்றவர்கள் நம்மை குறைபடுத்தி விமர்சிக்கும் போது அதை குறித்து கவலைப்படாதீர்கள்…
எப்பொழுது நம்மை குறித்து விமர்சனம் தொடங்கியதோ அன்றே நாம் நம் வாழ்க்கையின் உயர்ந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்…
எதையும் நிறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்…குறைவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…
மனதை புண்படுத்தி கொள்ளாதீர்கள்…
ஏன் அப்படிச் சொன்னார்கள் இப்படிச் சொன்னார்கள் என உங்கள் மனதை நீங்களே வண்டு குடைவதை போல குடைந்து கேள்வி கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்….
பொறாமை பிடித்தவர்கள் இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்….
காய்த்த மரம்தான் கல்லடிப்படும்…அந்த மரத்திற்குதான் உயிர்ப்பு இருக்கும்…உயிரினங்கள் அந்த மரத்தை தேடித்தான் வரும்….எனவே கவலை கொள்ளாதீர்கள்…
உங்கள் மீது கல்லெறிய விரும்புவர்களை அப்படியே விட்டு விடுங்கள்….அவர்களை கடந்து செல்லுங்கள்…