அமாவாசை அன்று செய்யக்கூடாத செயல்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
அமாவாசை அன்று ஒரு சில செயல்களை எல்லாம் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக அர்த்தம் உண்டு.
அப்பா அம்மா இருக்கும் பிள்ளைகள் அமாவாசை அன்று தலை முழுகக் கூடாது. சுமங்கலி பெண்கள் விரதம் இருக்கக் கூடாது. சுப நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது. மாமிசம் சமைக்கக்கூடாது சாப்பிடவும் கூடாது. வாசலில் மாக்கோலம் போடக்கூடாது. அன்றைய நாளில் எந்த நல்ல முடிவையும் எடுக்கக்கூடாது. அடிபட்டால் ஆறாது ஆகையால் கடினமான வேலைகள் செய்யக்கூடாது. அப்பா அம்மா இருக்கும் மகன்கள் விரதம் இருக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. முடி வெட்டுதல் மற்றும் முகம் சவரம் செய்தல் போன்றவை கூடாது.




