• September 29, 2023

அரசியல் தலைவர்களை ED, NIA ஏவி அச்சுறுத்தும் பாஜக; தொல். திருமாவளவன் கடும் கண்டனம்.!!

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை ED மற்றும் NIA -யை வைத்து டெல்லியை ஆளும் பாஜக அச்சுறுத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.  திருமாவளவன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் 24 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மறைந்த பாமக பிரமுக திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியை சார்ந்த நபர்களின் அலுவலகம் வீடுகள் போன்றவற்றில் சோதனை நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டணம் தெரிவித்து உள்ள விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் “தமிழகத்தில் காலூன்ற நிலைக்கும் டெல்லி பாஜக முன்னதாக ED-யை ஏவி வந்தது தற்போது NIA ஏவி வருகிறது அரசியல் தலைவர்களை பாஜக அச்சுறுத்தி வருகின்றது. இவை மிகவும் கண்டிக்கத்தக்கது”, என்று தொல் திருமாவளவன் பேசி உள்ளார்

Read Previous

மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்; சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்தவருக்கு சோகம்.! கட்சியினர் கண்ணீர் அஞ்சலி.!!

Read Next

தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண்; பணியிடத்தில் அவசர கதியில் நடந்த சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular