அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை..!! படித்ததில் மிகவும் ரசித்தது..!!

Oplus_131072

 

அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை

*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*….சிறிய சச்சரவு…பெரிதாகி…கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..

இது நீடிக்கவே…எ மனைவி அவள் கணவன் எதிரில் வந்து…

நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்….

நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.

அவள் எண்ணத் துவங்கினாள் …. ….

*மனைவி* – 1 … 2 … 3 …

*கணவன்* – (அமைதி) … !

*மனைவி* – 4 … 5 …

*கணவன்* – (மவுனம்)

*மனைவி* – 6 … 7…

*கணவன்* – (அவன் மனதில் மகிழ்ச்சி… ஆனாலும் அமைதி)

உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது …

*மனைவி* – 8 … 9 …

*கணவன்* – (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி …)

*மனைவி* …

(அமைதி) …

(பயங்கர மவுனம்)

பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !

எண்ணு … எண்ணு …

*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?

*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க… இல்லைனா நான் போயிருப்பேன் …!!

கணவன் – 😗😗

*பின் குறிப்பு* …

எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.

 

Read Previous

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..??

Read Next

மறுமணம் பற்றிய பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular