முன்னோர்கள் காலகட்டத்தில் விளக்கெண்ணெய்தான் முதல் வைத்தியமாகும், கை கால் நீவுவது, கண்களுக்கு விளக்கெண்ணெய் விடுவது, மேலும் விளக்கினை கொடுப்பதன் மூலம் சூடு தணியும் என்று கூறுவது உண்டு…
நம் முன்னோர்கள் அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த அவர்கள் விளக்கெண்ணையை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர், ஒரு டம்ளர் சூடு தண்ணீரில் விளக்கெண்ணெய் விட்டு சிறிதளவு உப்பு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மறுநாள் காலை கிருமிகள் வெளியேற்றி வயிறு சுத்தமாகும் உடல் புத்துணர்வாகும், மேலும் விளக்கெண்ணையை தொப்புளில் வைத்து விட்டு தூங்கி எழுந்தால் இரவு முழுவதும் உடல் சூடு தணிந்து காலையில் உடல் குளிர்ச்சி அடையும், மேலும் விளக்கெண்ணையை கண்களில் விடும் பொழுது கண்களில் உள்ள தூசிகள் கரைந்து கண்ணீராக வெளியேறும் இதன் மூலம் கண் பார்வை பளிச்சென்று இருக்கும், மேலும் விளக்கெண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்தால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும்..!!




