
தளபதி விஜய் அவர்கள் எங்கு சென்றாலும் சமீப காலமாக கூட்ட நெரிசல் அதிகமாக தான் காணப்படுகிறது. அவர் கடைசியாக சென்னையில் ரோட்டில் சென்ற போதும் கோயம்புத்தூர் பூத் கமிட்டி மீட்டிங்குக்கு சென்ற போது சாலையில் கூட்டம் அதிகமாக இருந்தன. அவை இரண்டும் அரசியல் வேலைக்காக என்றாலும் நேற்று மதுரையில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
விஜய் அவர்கள் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்லவிருந்தார். இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை. ஊடகங்களில் அவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து கொடைக்கானல் செல்லவிருக்கிறதாக ஒரு தகவல் வெளியானது. அதற்காக அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நேற்றைய தினம் காலை 4 மணி அளவில் இருந்தே மதுரை விமான நிலையத்தில் ஒன்று கூடி அவருக்காக காத்திருந்தனர்.
விஜய் அவர்கள் வெகு வருடங்களுக்கு பிறகு மதுரையில் காட்சியளிப்பதை பார்ப்பதற்காக அத்தனை மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர் வந்த பிறகு ஒலித்த சத்தம் மதுரையையே உலுக்கியது என்றுதான் நாம் கூற வேண்டும். நேற்று கூடிய கூட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயின் மீது வைத்த குற்றச்சாட்டை கலாய்த்தும் வருகின்றனர். அதாவது அவர் வீட்டிலேயே இருக்கிறார் வெளியே எங்கும் வரவில்லை என்று பேட்டியளித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் ஊடகங்களில் பேசி வருகின்றனர்.