
ஆடி மாதம் என்றால் வீடு தோறும் சாம்பிராணி வாசமும் கற்பூர தீபமும் காதோடு கடவுளின் பாடலும் மனதோடு பக்தியும் பொங்கி ஓடும், அப்படி இருக்கையில் ஆடி மாதம் ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும், இதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தீரும்.
கடவுளுக்கு தீபம் ஏற்றும் போது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து முகங்களில் தீபம் ஏற்ற வேண்டும், பக்தி பாடல்கள் பாடி நெய்வேத்தியம் அல்லது சர்க்கரை பொங்கல் தெய்வத்திற்க்கு படைத்து வீட்டார் மற்றும் சுற்றும் உள்ளவர்களுக்கு அதனை தருவதினால் நமது பஞ்சமெல்லாம் பறந்து ஓடும் என்றும், கன்னிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள்,குங்குமம்,பூ,பொட்டு என சூடி அவர்களை தெய்வமாக பாவித்து வணங்கும்போது அம்மனே நம் வீட்டில் வந்து தரிசனம் தருவதாக முன்னோர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஆடி மாதத்தில் ஆடி வெள்ளியும் ஆடி அமாவாசையும் சிறந்த நாளாக கருதப்படுகிறது..!!