ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி இளைஞர்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழங்குடி அருகே ஸ்ரீ ரெகுநாத புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மகன் சிவன்ராஜ் (வயது 34) பட்டதாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்கின்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் விளையாடி வந்துள்ளார்.

அதன் மூலம் சிறு சிறு தொகையை விளையாடி வென்றும் உள்ளார் அந்த வகையில் இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடி உள்ளார். சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையையும் இழந்துள்ளார். அதன் பின் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார் .

அதிலும் அவர் தோல்வியடைந்துள்ளார். கடன் வாங்கி விளையாடி பணத்தை இழந்தார் அதன் படி மொத்தம் இது போல் 15 லட்சம் ரூபாய் வரை இழந்ததாக என தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவன்ராஜ் நேற்று தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலப்பிரகி குடித்துள்ளார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்…!

Read Next

இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…! வெளியான அறிவிப்பு…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular