ஆவணப்பட சர்ச்சையில் நடிகர் தனுஷை விளாசி பகிரங்க கடிதம் வெளியிட்டார் நயன்தாரா..!!

நவம்பர் 18ஆம் தேதி திரையிடப்படவுள்ள நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பான விவகாரத்தில் நடிகர்-இயக்குனர் தனுஷை நடிகை நயன்தாரா பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ள மூன்று பக்க கடிதத்தில், தனுஷ், அவரது வெற்றிப் படமான நானும் ரவுடி தான் தயாரித்த நிலையில், தனது ஆவணப்படத்தில் திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழை (NOC) நிறுத்தி வைத்துள்ளார் என விமர்சித்துள்ளார்.நானும் ரவுடி தான் தொடர்பான உள்ளடக்கத்தை பயன்படுத்துவதற்கு இரண்டு வருடங்களாக அனுமதி கோரியும் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், படப்பிடிப்பின்போது தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சிகளை பயன்படுத்தியதற்கும், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதிர்ச்சி அளிப்பதாகவும், மிகவும் வினோதமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.நடிகர் தனுஷ் தனக்கும் அவரது கணவர் திரைப்படத் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.இது ஆவணப்படத்திற்கும், அதன் ஒத்துழைப்பாளர்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறினார்.மேலும், தயாரிப்பாளராக தனுஷிற்கு மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்த நானும் ரவுடி தான் படத்தின் வெளியீட்டின் போது தனுஷிடம் இருந்து கடுமையான கருத்துக்கள் மற்றும் அதிருப்தியை உணர்ந்ததாகவும், கடந்தகால சிக்கல்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.

தனுஷ் அனுப்பியுள்ள நஷ்ட ஈடு நோட்டீஸை சட்டரீதியாக பதிலளிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.மேலும், நடிகர் தனுஷை கஸ்த்தூரி ராஜாவின் மகன் மற்றும் செல்வராகவனின் சகோதரர் என்று தனது கடிதத்தில் அடையாளப்படுத்தி உள்ள நயன்தாரா, தான் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்து சுயமாக வளர்ந்து இந்த நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.நானும் ரவுடிதான் படத்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே, நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் என நயன்தாரா அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டார்.இதற்கிடையே, தனது குற்றச்சாட்டுகளை திரித்து, பன்ச் வசனங்களை சேர்த்து அடுத்த ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசவும் வாய்ப்புள்ளது எனக் கூறிய நயன்தாரா, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டுள்ளார் எனக் கூறி ஓம் நமச்சிவாயா என கடிதத்தை முடித்துள்ளார்.

Read Previous

தலைமுடி வளர்ச்சியின்மைக்கு இவ்வளவு காரணமா உடனே படியுங்கள்…!!

Read Next

தோல் நோய்கள் வறட்சியான தோல் வியாதிகள் இவற்றிற்கு உடனடி தீர்வு இதோ…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular