இது போல கணவர்கள் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டுமோ..!!

#பெண்மை …

💟பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு…

💟மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..

💟இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு…

💟இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..

💟சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினங்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்…

💟அவள் கர்ப்பம் சுமைக்கையில்
நீ அவளைச் சுமந்திடு…

💟விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..

💟உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே…

💟தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்…

💟தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்…

💟வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..

💟சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்….

💟எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..

💟நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு…

💟நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு….

💟உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..

💟வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..

💟வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..

💟அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை…அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை…

💟அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..

💟தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு…

💟சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு….

Read Previous

கொலு வைக்க முடியாதவர்கள் எப்படி வழிபடலாம்..!!

Read Next

Indian Bank-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular