
நமக்கு தின்பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த கோடைகால விடுமுறையில் குழந்தைகள் வீட்டிலிருந்து அதிகமாக கேட்பதும் அந்த தின்பண்டங்களை தான். அப்படி இன்று நாவில் வைத்ததும் எளிதில் கரையக்கூடிய சுவை அதிகமாக இருக்கும் மில்க் புட்டிங்கை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பால் – 1 கப்
முட்டை – 3
சீனி – 5 கரண்டி
பாதாம், பிஸ்தா – 10 கிராம்
ஏலக்காய்பொடி – சிறிதளவு
செய்முறை:
பாலை நன்றாக காய்ச்சவும். பின் அதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். மேலும் பாதாம் பிஸ்தாவை குட்டி குட்டியாக வெட்டிக் கொள்ளவும். அதன்பின் முட்டையை உடைத்து அதில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின் அந்த ஆரியபாலை இதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். அந்தக் கலவையின் பொடியாக்கிய சர்க்கரையையும் சேர்க்கவும். இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். வெந்த பின்பு அதன் மீது பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அவ்வளவுதான் சுவையான மில்க் புட்டிங் தயார்.