‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் விளம்பரப் பணிகளின் போது சென்னையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று (நவ., 19) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாதுகாப்பு இங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். துபாயில் பெண்களுக்கான சட்டம் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தியாவிலும் அது மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




