இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மாற்றம்..!! பாகிஸ்தான் விதித்த புதிய நிபந்தனை..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நடத்தும் சாம்பியன்ஸ் டிராபியை 2025 யில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்த போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்றியமைக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.
அதாவது, நேற்று (05-12-2024) சாம்பியன்ஸ் டிராபி 2025 யை “ஹைபிரிட் மாதிரியில்” நடத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த பேச்சுவார்த்தை சமரசம் நிலையை அடைந்தது. அதில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில் போட்டிகளை துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2026 இந்தியாவில் நடைபெற உள்ள “டி 20 உலக கோப்பை” தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பரிந்துரைத்ததை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.




