
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் அதிகமாக இருந்து வந்த வேலையில் மே 7ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்து 9 தீவிரவாத முகாம்களை அளித்தது. அதன் பிறகு எல்லைப் பகுதிகளான பஞ்சாப் ராஜஸ்தான் ஜம்மு அண்ட் காஷ்மீர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அது எல்லாம் இந்திய ராணுவம் முறியடித்தாலும் பதற்றம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த தருணத்தில் பஞ்சாப் ஹரியானா தலைநகரமான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் இந்திய ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதாவது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சைரன் மூலம் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று தரம்சாலாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நின்றதும் இரவு முழுவதும் எல்லைப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதும் இந்த போர் பதற்றத்தினால்தான் என்று கூறப்படுகிறது. ஆகையால் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி இந்திய அரசு தெரிவித்து வருகிறது.