
ஐபிஎல் போட்டிகளின் லீக் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்க இருக்கும் வேலையில் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போரினால் நிறுத்தப்பட்டு ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இடையே அதிகமாக இருந்தது.
துபாய் மற்றும் இங்கிலாந்து ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் நடத்த கேட்டிருந்தனர். ஆனால் இப்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. இனி மிச்சம் இருக்கும் லீக் போட்டிகள் சென்னை ஹைதராபாத் பெங்களூரு ஆகிய தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆகையால் மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் எங்கு நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் இந்த ஐபிஎல் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை கண்டு களிப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.