
காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் தொடங்கி கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளும் பரபரப்பாக இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவுடன் இஸ்ரேலும் ரஷ்யாவும் தோள் கொடுத்து நின்று வந்தாலும் பாகிஸ்தானுடன் துருக்கி துணை இருந்தது.
உலகின் முக்கிய நாடுகளான சீனா மற்றும் அமெரிக்கா இரண்டு பக்கமும் இல்லாமல் நடுநிலையை கடைப்பிடித்து வந்தது. மேலும் இன்று மதியம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனது X தளத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடுவில் அமெரிக்கா இருந்து போரை நிறுத்த கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இரண்டு நாடுகளும் ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் வெளியுறவுத்துறை நிர்வாகி விக்ரம் மிஸ்ரி அவர்கள் பாகிஸ்தானும் இந்தியாவும் முப்படைகளை வைத்தும் எந்த தாக்குதலையும் நடத்தாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். ஆனால் இனி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் எது நடந்தாலும் அது போருக்கான அறிகுறியாகத்தான் பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.