இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் கண்டிப்பாக பின்பற்றங்கள்..!!
உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்துள்ள குத்துவிளக்கு அல்லது ஏதேனும் ஒரு விளக்கை நீங்கள் கையாளோ அல்லது ஊதியோ அவிக்க கூடாது. அதற்கு பதிலாக ஒரு பூவை எடுத்த அந்த பூவின் உதவியுடன் அதை அணைக்க வேண்டும் அதுவே சரியான முறை.
மேலும் குறிப்பாக வீட்டில் உள்ள யாரையும் குறிப்பாக குழந்தைகளை சனியன் என்று திட்டுவது கிண்டல் கேலி செய்வது இதையெல்லாம் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இவ்வாறு சனியன் என்று சொன்னால் அந்த சனி உங்களையே வந்து சேரும் என்பது உண்மை.
நீங்கள் உங்களுடைய பணத்தை ஒருவருக்கு நீங்கள் தர வேண்டும் என்றால் நீங்கள் அந்த தொகையை உங்களுடைய வாசற்படியில் இருந்து தரக்கூடாது. அவ்வாறு தருவது நல்லதுக்கு இல்லை.
நீங்கள் உங்களுடைய வீட்டில் உள்ள ஆட்டுக்கல் அம்மிக்கல் மற்றும் படிக்கட்டுகளில் அமரும்போது அது உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை கொடுக்கும் ஆகவே இது போன்ற பொருட்களின் மீது நீங்கள் அமர்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.




