இந்த ஆயா திருடியது என் மனதை.. என் ஒப்புதலுடன்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

திருடிய ஆயா😲”

 

🫰ஒரு ஆயா பல வருடங்களாக ஒரே இடத்தில், ஒரு டிபார்மெண்ட் ஸ்டோர் முன்பு பழ வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்..

 

🫰போகவர நான் பார்ப்பேன், ஆயாவும் பார்க்கும்.

 

🫰சரி. இந்த ஆயாவிடம் இன்று வாங்கலாம் என்று முடிவு செய்து போனேன்.

 

🫰”மாம்பழம் எப்படி ஆயா..?”

 

🫰”எடு ராசா. உனக்கென்ன எச்சாவ கண்ணு சொல்ல போறேன்”

 

🫰மல்கோவா மாம்பழம் நன்றாக இருந்தது.

 

🫰”எடு கண்ணு. கல்கண்டு மாதிரி இருக்கும்”.

 

“எவ்வளவு..?”

 

🫰கிலோ 70 ரூபா. நீ 60 ரூபா கொடு போதும்.”

 

🫰60 அதிகமோ.? மனசு பேரம் பேசியது. “அம்பது போட்டு 2 கிலோ கொடு ஆயா”

 

🫰”கட்டாது சாமி. அசலே 55 ரூபா வருது.”

 

🫰சரி, வேண்டாம். அப்புறம் வர்றேன்.

 

🫰நகர முற்படும்போது “சரி எடு ராசா. காலைல மொத வியாபாரம்”

 

🫰3 கிலோ வாங்கினேன். ஆஹா. நல்ல பேரம். மனசு குதூகலித்தது.

 

🫰சில நாட்கள் கழித்து என் ஏரியாவில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போனேன்.

 

🫰அதனுடன் சேர்ந்த மாதிரி ஒரு கார்ப்ரேட் பழ விற்பனை நிலையம். பழங்கள் நேர்த்தியாக அடுக்கி அழகாக இருந்தது.

 

🫰அதோ மல்கோவா. ஆயாவிடம் வாங்கியது போலவே இருந்தது. என்ன விலை?

 

🫰கிலோ 80 என்று எழுதியிருந்தது. “ஏம்மா மல்கோவா கிலோ என்ன விலை?” 80 ரூபா” இங்கே பேரம் பேச முடியாது. ஒரே விலைதான்.

 

🫰அப்போ, ஆயாவிடம் 50 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கி, அதை பெருமையாக வீட்டில் சொல்லி, ஏனோ மனசு வலித்தது.

 

🫰மாலை வரும்போது ஆயாவை பார்த்தேன். மெலிதான தேகம். சுருக்கம் நிறைந்த முகம். நடுங்கும் கைகள். ரோட்டில் பழ வியாபாரம்.

 

🫰மனது வலித்தது. வலிகளே வாழ்க்கையாகி போனது இந்த ஆயா மாதிரி பலருக்கும் இங்கே.?

 

“என் MBA என்னை பார்த்து சிரித்தது”

 

🫰”ஆயா ஏதாவது உதவி வேணுமா” பணம் ஏதாவது தரட்டுமா”

 

🫰வேண்டாம் கண்ணு. ஏதோ கடவுள் கொஞ்சம் படியளக்கறார் ..

 

🫰”ஆயா! இதுல 2000 இருக்கு. வாங்கிக்க”

 

🫰”எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு?

 

🫰”இல்ல ஆயா. இருக்கட்டும். எங்க அம்மாக்கு தர மாட்டேனா?”

 

🫰கண்கள் கலங்கியபடி வாங்கிக் கொண்டது ஆயா.

 

🫰மனசு கொஞ்சம் லேசானது.

 

🫰என் அம்மா சொல்வாள். “மற்றவர்கள் துன்பங்களை கேட்டால் மட்டும் போதாது. முடிந்த உதவிகளை செய்யணும்”

 

🫰கிளம்பும்பொழுது ஆயாவிடம் கேட்டேன்,”ஆயா ஆப்பிள் எப்படி.?

 

🫰கிலோ 120. நீ 110 கொடு சாமி.”

 

🫰100 ரூபா போட்டு 3 கிலோ போடு”

 

🫰தமாசுக்குதான் கேட்டேன். ஆயாவின் முகம் சட்டென்று வாடி விட்டது.

 

🫰”சரி கண்ணு. ஏதோ மகராசன் எங்கிட்ட வந்து வாங்குறியே”

 

🫰3 கிலோ வாங்கி 500 ரூபாய் கொடுத்தேன்.

 

🫰”எதுக்கு இவ்வளவு பணம் கண்ணு.?”

 

🫰இல்ல ஆயா. இதையே தோ அங்கே இருக்கிற கார்ப்பரேட் பழக்கடையில் வாங்குனா ரூ500 கொடுத்திருப்பேன்.”

 

🫰பரவாயில்லை,புடி ஆயா என்று உரிமையோடு அந்தப் பணத்தையும் அதன் கையில் கொடுத்து விட்டேன் இல்லை திணித்து விட்டேன்.

 

🫰என் பிடிவாதம் பார்த்து, ஆயா முகத்தில் முதன்முறையாக சிரிப்பு. அது என்றும் மறக்காது எனக்கு.

 

🫰இனி வீதியில் வியாபாரம் செய்பவர்களிடம் பேரம் பேசவே கூடாது. பாவம் அவர்கள்.

 

🫰வெளியே சொல்ல முடியாத பல விதமான வலிகளோடு அவர்களில் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

🫰இந்த ஆயா திருடியது என் மனதை… என் ஒப்புதலுடன்…❤️

Read Previous

கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய..!! இதை மட்டும் குடிங்க போதும்..!!

Read Next

நாய்க்கடுகு செடி என்பது என்ன.?? நாய்க்கடுகு செடியின் நன்மைகள் ..!!தீமைகள்..!! மற்றும் மருத்துவ குணங்கள் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular