
இந்த கோடைகாலத்தில் குழந்தைகள் அதிகமாக தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு சுவையானது மட்டுமில்லாமல் சத்தானது அதிகம் கொடுக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது. அப்படி இன்று அனைவருக்கும் பிடித்த பல நன்மைகளை தரும் சிவப்பு அவலை வைத்து சுவையான லட்டு செய்வது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் – 1 கப்
வெல்லம் ஒரு – 1 கப்
தேங்காய் – 1 கப்
முந்திரி – 10
நெய் – 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊத்தி முந்திரி மற்றும் தேங்காயை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். அதே கடாயில் அவலையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அவளை ஒரு ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்து கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் வெள்ளம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். பாகு கம்பி பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, தேங்காய் ஊற வைத்திருக்கும் அவல் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் ஒரு இரண்டு நிமிடம் கிளறி விட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து லட்டாக உருட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சிவப்பு அவல் லட்டு தயார்.