
இன்றைய சுயநல உலகில் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல அனைவருமே தங்கள் உண்மையான முகத்தை மறைத்து வாழும் தற்போதைய உலகில் போலியான மக்களை கண்டுபிடிப்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல போலியான மக்களை வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுபவர்களே பாதுகாப்பாக வாழ முடியும்…
உண்மையில் போலியான நபர்களை கண்டறிவது என்பது அவ்வளவு எளிதானதல்ல ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசியில் பிறந்தவர்களுக்கு உண்மையான போலியான நபர்களை கண்டறியும் அசாத்தியமான திறன் இருப்பதாக தெரிகிறது இந்த பதிவில் எந்த ஒரு ராசிகளில் பிறந்தவர்கள் போலியான நபர்களை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் என்று பார்ப்போம்..
துலாம் ; துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலையான பார்வைக்கும் கூர்மையான பகுத்தறிவுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் மனித இயல்பை பற்றிய உள்ளார்ந்த புரிதலை கொண்டுள்ளவர்கள் இது அவர்களை போலி மக்களை கண்டறிவதில் விதிவிலக்காக சிறந்தவர்களாக ஆக்குகிறது. இந்த திறன் தற்செயலானது அல்ல அனைத்து விஷயங்களிலும் நியாயம் மற்றும் நேர்மையான அவர்களின் ஆழ்ந்த விருப்பத்தில் இருந்து உருவாகிறது..
துலாம் ராசிக்காரர்கள் நம்ப முடியாத அளவிற்கு சமூகம் சார்ந்தவர்களாக இருப்பார்கள் அவர்கள் தொடர்புகள் மற்றும் உறவுகளை உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.இதன் மூலம் நம்பகத்தன்மையை அடையாளம் காண்பதில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. துலாம் ராசிக்காரர்கள் எளிதில் போலியானவர்களை கண்டுபிடிக்க முடியும் அவர்கள் உண்மையான குணம் மற்றும் ஏமாற்றுபவர்களை உடனடியாக கண்டு கொள்கிறார்கள் அதனால் தான் அவர்கள் பெரும்பாலும் உண்மையானவர்களால் சூழப்பட்டு இருக்கிறார்கள்…
விருச்சகம் ; விருச்சக ராசிக்காரர்கள் மனித மனதை புரிந்து கொள்வதில் நிபுணர்களாக இருக்கிறார்கள். அவர்களின் உள் உணர்வு கூர்மையானது மற்றும் சக்தி வாய்ந்தது இந்த ராசிக்காரர்கள் ஒருவரின் வெளி தோற்றத்திற்கு உள்ளே மறைந்திருப்பதை வெளிக்கொணரும் அசாத்திய திறனை கொண்டுள்ளவர். போலி நபர்களை கண்டறிவதில் விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் அனைவரையும் விட ஒரு படி மேலே இருப்பார்கள் ஏமாற்றுவதை கண்டறிவதற்கான ஏழாவது அறிவை கொண்டுள்ளனர். விருச்சக ராசிக்காரர்களை பற்றிய சுவாரசியமான விஷயம் அவர்களின் மர்மமான வசீகரம் அவர்கள் மக்களை எளிதாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களை யாரும் தங்கள் நெருங்கிய வட்டத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள்…
தனுஷ் ; நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சு என்று வரும்போது அதில் தனுசு ராசிக்காரர்கள் முதலிடத்தை பெறுகிறார்கள். சாகச மனப்பான்மை மற்றும் வெளிப்படையான இயல்புக்கு பெயர் பெற்ற தனுசு ராசிக்காரர்கள் நேர்மையின்மை கண்டறியும் திறனை கொண்டுள்ளனர். அவர்கள் இயற்கையாகவே உண்மையை தேடுபவர்கள் எப்போதும் உண்மையான உறவுகளை தேடுபவர்கள். அவர்களின் வாழ்க்கை மீதான ஆர்வம் அவர்களை அனைத்து வகையான மக்களையும் சந்திக்க வழிவகிக்கிறது போலியானவர்களை கண்டுபிடிப்பதில் அவர்களின் திறமையை மேம்படுத்துகிறது அவர்களின் நேர்மை மட்டும் அவர்களை வஞ்சகத்தை அடையாளம் காண்பதில் சிறந்தவர்களாக மாற்றுகிறது. அவர்களின் தனித்துவ தத்துவ புத்திக் குடும்பம் மற்றும் ஞானத்திற்கான தேடல் ஆகியவை மனித நோக்கங்களை புரிந்து கொள்ள உதவுகிறது..
மீனம் ; மீன ராசிக்காரர்கள் வலுவான உள்ளுணர்வு மற்றும் பச்சாதாப இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றி ஆழமான புரிதலை கொண்ட ஆன்மாக்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உணர்வு திறன் அவர்களை மக்களை பற்றி புரிந்து கொள்வதிலும் அவர்களின் நோக்கங்களை புரிந்து கொள்வதிலும் சிறந்தவர்களாக மாற்றுகிறது இந்த உள்ளார்ந்த திறன் மீன ராசிக்காரர்களுக்கு போலின் அவர்களை விரைவாக அடையாளம் காட்டுது..
மீன ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் உணர்ச்சிபூர்வமான நம்பகத்தன்மையை விரும்புகிறார்கள் யாராவது உண்மையாக இல்லை என்று அவர்கள் உணர்ந்தால் அவர்களை தங்கள் வாழ்க்கையை விட்டு உடனடியாக வெளியேற்றி விடுவார்கள்..!!