இந்த மூன்று நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என ஏன் சொல்கிறார்கள் தெரியுமா..??

Oplus_131072

 

ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என சொல்லப்படுகிறது. நம்முடைய வீடுகளிலும் பெரியவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்ய வேண்டும் என கூறுவது உண்டு.

எந்த நாளில் என்ன செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என இந்து மத சாஸ்திரங்களும், பெரியவர்களும் சொல்லி வைத்துள்ளார்கள். அப்படி பெரியவர்கள் சொல்லும் விஷயங்களில் ஒன்று தான் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என சொல்லுவது உண்டு. இதற்கு ஆன்மீக, சாஸ்திர மற்றும் அறிவியல் ரீதியாக சில காரணங்களும் சொல்லப்படுகிறது.

இந்து மத சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதனால் ஜோதிட ரீதியாக, சில தவறான நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் அது தொடர்பான கிரகங்களின் கெடு பலன்களை பெற வேண்டி இருக்கும். இதன் விளைவாக பொருளாதார இழப்பு, ஆரோக்கிய பிரச்சனைகள், தொடர்ந்து தடைகள் ஆகியன ஏற்படும் என சொல்லப்படுகிறது. அப்படி செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்ற காரணத்தை தெரிந்த கொள்ளலாம்.

எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாத நாட்கள் :
செவ்வாய்கிழமை :
செவ்வாய் கிழமை, செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. தீ, தைரியம் ஆகியவற்றை குறிக்கும் கிரகம் இது. இதனால் செவ்வாய்கிழமையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாவதுடன், அதிகமான மனஅழுத்தத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதிக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் உறவு கெடும்.

வியாழக்கிழமை :
வியாழக்கிழமை குரு பகவானுக்குரிய நாள். இவர் தான் அதிர்ஷ்டம், ஞானம், செல்வம் ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார்கள். இவருக்குரிய வியாழக்கிழமையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஜாதகத்தில் குரு பலவீனம் அடைவார். இதனால் நிதி சிக்கல்கள் ஏற்பட்டு வீட்டில் வறுமை ஏற்படும். ஞானம், புத்திசாலத்திற்கும் குருவே காரணமானவர் என்பதால் படிப்பில் மந்த தன்மை ஏற்படுவதுடன், மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வீட்டின் செல்வநிலை, குழந்தை பேற்றில் தாமதம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

ஞாயிற்றுக்கிழமை :
எண்ணெய் என்பது சனி பகவானுக்குரியது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உரியது. சூரியனும், சனியும் தந்தை-மகன் உறவாக இருந்தாலும் எதிரிகளாக கருதப்படுபவர்கள். இதனால் சூரியனுக்குரிய நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் நோய்கள், மனஅழுத்தம், மரியாதை இழப்பு ஆகியவை ஏற்படும். ஞாயிற்றுக்கிழமையில் தலையில் எண்ணெய் தேய்ப்பதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதன் விளைவாக பித்தம் அதிகரித்து அது தொடர்பான நோய்கள், தீராத தலைவலி ஆகியவை ஏற்படும்.

கடன், நோய், வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி, நன்மைகளை பெறுவதற்கு உரிய நாட்களான இந்த மூன்று கிழமைகளில் சனி பகவானுக்குரிய எண்ணெய் தேய்த்து, குறிப்பாக நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆழ்ந்த கருத்தை வலியுறுத்துவதற்காக தான் “சனி நீராடி” என பழமொழியே சொல்லி வைத்தார்கள். சனிக்கிழமையில் மட்டுமே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என சொன்னார்கள். இதனால் சனியால் ஏற்படும் தீமைகள் குறையும், கெடு பலன்களில் இருந்து விடுபடலாம்.

Read Previous

கை வைத்தியம்..!! சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணுவது..!! எப்படி..??

Read Next

மரு உதிர வீட்டு வைத்தியம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular