
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்தான் கல்வி நிறுவனங்களில் ஏற்படும் ஜாதி பிரச்சனை. மாணவர்களுக்குள் பெற்றோர்கள் ஜாதி என்னும் நஞ்சை விதைத்து விடுகின்றனர். அந்த குழந்தைகளோ பள்ளி நிறுவனங்களில் வந்து ஜாதியை வைத்து பிரச்சனையும் செய்கின்றனர். இதனால் நீதிமன்றம் கடந்து சில நாட்களுக்கு முன்பாக இனி எந்த கல்வி நிறுவனங்களிலும் ஜாதி பெயர் இருக்கக்கூடாது என்றும் அப்படி இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது நம் அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் தற்போது நீதிமன்றமானது இனி எந்த கல்வி நிறுவனங்களிலும் ஜாதியை குறிக்கும் எந்த விஷயமும் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. அதாவது கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாடல்களை ஒளிபரப்ப கூடாது என்றும் ஜாதியை பற்றி பேச அனுமதிக்க கூடாது என்றும் அப்படி மாணவர்கள் ஜாதியை பற்றி பேசினால் அதை உடனடியாக கண்டிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.