ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் குடும்ப ஊதியம் பெறுபவர்களுக்கான லிஸ்டில் இதுவரை குடும்பத்தில் இருக்கும் மகள் சேர்க்கப்பட முடியாது குடும்பத்தில் உங்கள் மனைவி சேர்க்கப்பட வாய்ப்பு மட்டுமே இருந்தது அப்படி இருக்க மகள் பெயரை இனிமேல் இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
புதிய மத்திய சிவில் சர்வீஸ் ஓய்வையும் விதிகள் 2021 ன் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய அரசு பணியில் ஒருவர் சேரும்போது ஓய்வு பெறுவதற்கு முன்பு தங்கள் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் ஊனமுற்ற உடன் பிறந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்ட குடும்ப விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்று DOP & PW தெளிவுபடுத்தியுள்ளது, இந்த விவரங்கள் படிவம் நாளில் அலுவலக தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும், இத்தனை காலம் மகள் பெயரை சேர்க்க முடியாது புதிய விதி திருத்தங்கள் படி மகள் பெயரை இனிமேல் இந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மகள் நேரடியாக ஓய்வூதியம் பெற அனுமதிக்கப்பட மாட்டார் என்ற விதி எப்போதும் போல தொடரும் ஓய்வூதியம் பெறுபவரின் மரணத்திற்கு பின்பு அதைப் பெற தகுதியாக தேர்வு செய்யப்படுவார்..
பென்ஷன் : இதற்கு இடையில் தான் மத்திய அரசு ஊழியர்கள் பென்சன் தொடர்பாக வைக்கும் கோரிக்கைகளை விண்ணப்பங்களை உடனே விசாரித்து தீர்வு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக சிசிஎஸ் ஓய்வூதியம் விதிகள் 2021 இல் குறிப்பிட்டுள்ள காலக்கெடுப்பை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு நிதி அமைச்சகத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை மத்திய வாரியம் உத்தரவிட்டுள்ளது நேற்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன அதாவது அரசு விதிகளில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது..!!




