• September 29, 2023

இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை இந்த வழியில் செல்லும் ரயில்கள் நிறுத்தம்..! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சேலம் மற்றும் கோவை பேசஞ்சர் ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் மற்றும் ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் படி கோவை மற்றும் சேலம் ரயில், சேலம் மற்றும் கோவை ரயில் ஆகியவை இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதனைப் போலவே பெங்களூரு மற்றும் கொசுர் சிறப்பு ரயில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் புதன் கிழமைகளில் குறிப்பிட்ட இந்த மார்க்கத்தில் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என்ற தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

Read Previous

கொடுமைப்படுத்திய கணவன்..! இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மனைவி..! பரபரப்பு சம்பவம்..!!

Read Next

இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா?..!தொழிலதிபருக்கு குவியும் பாராட்டுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular