• September 24, 2023

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமியிடம் வேலையை காட்டிய இளைஞர்… போக்சோவில் கம்பி எண்ண வைத்த பெற்றோர்.!!

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவேன் என்று மிரட்டிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமிக்கு உளுந்தூர்பேட்டையை சார்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞருக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமி அந்த இளைஞருக்கு தனது புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார், மேலும் கடந்த மே மாதம் உளுந்தூர்பேட்டை வந்துள்ள சிறுமி அந்த இளைஞருடன் தங்கி உள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் வந்து சிறுமியை மீட்டு சென்று உள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்த இளைஞன் தான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பின் செய்து வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல் துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை சென்று சதீஷ்குமாரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

Wipro நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணாம விண்ணபியுங்கள்..!!

Read Next

கஞ்சா போதையில் போலீசிடமே கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular