
தனது இன்ஸ்டா காதலனை திருமணம் செய்ய தன் ஆறு வயது மகளுடன் போலந்தை சேர்ந்த பெண்மணி இந்தியாவுக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் 19 வயது பெண் ஒருவர் பாகிஸ்தானில் இருந்து பெங்களூரைச் சேர்ந்த தனது காதலனை தேடி வந்துள்ளார். லூடோ விளையாட்டினால் நட்பாகி பின் வந்த காதலால் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே போல சில நாட்களுக்கு முன்பாக தன்னோடு பப்ஜி விளையாடிய காதலனை கரம் பிடிக்க அத்துமீறி பெண் ஒருவர் இந்தியாவில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இறுதியில் காதலுக்கு எல்லைகளே கிடையாது என்பதை நிரூபிக்கும் பொருட்டு இந்தியாவில் மற்றொரு சம்பவம் நடந்தது. அதன்படி போலந்து நாட்டைச் சேர்ந்த பார்பரா என்னும் 40 வயது பெண்மணி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹசாரி பாக் என்னும் சிறுநகரத்தில் வசித்து வரும் மாலிக் என்னும் இளைஞருடன் 2021 லவ் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின் நட்பாகி அது நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில் மீண்டும் திருமண வாழ்க்கையில் நுழையலாம் என முடிவெடுத்து தனது ஆறு வயது மகளுடன் 2027 வரை அனுமதி இருக்கும் டூரிஸ்ட் விசாவில் இந்தியாவிற்கு தனது காதலனை காண வருகை தந்துள்ளார் பார்பரா.
பின் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில் நீதி மன்றத்தில் திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். தற்போது இருவரின் திருமணத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.