தவெகவில் செயல்படாத மாவட்ட செயலாளர்கள், இரண்டாம் கட்ட தலைவர்களை கண்காணிக்க ஏஜென்சி ஒன்றின் உதவியை விஜய் நாடியதாக தகவல் வந்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு இரண்டாம்கட்ட தலைவர்களின் போதிய அனுபவமின்மையே காரணம் என விஜய் நம்புவதாகவும், சில மா.செ.,க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களை கண்காணித்து வாரா வாரம் ரிப்போர்ட் கொடுக்க ஒரு ஏஜென்சியை விஜய் நாடியுள்ளதாகவும், செயல்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.




