இரவில் படுத்த உடனே தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்..!!

தூங்க செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம்?

இரவு படுக்கும் முன்பு சிறிய கிண்ணத்தில் திராட்சி சாப்பிடுவது தூக்கமின்மையை சரி செய்ய உதவுகிறது.

பாதாம், ரோஜா, மல்லிகை போன்ற நறுமண அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி முழு உடல் மசாஜ் செய்யலாம் தேவையெனில் லாவெண்டர் மற்றும் சந்தனம் சேர்க்கலாம். நீராவி குளியலும் தூக்கத்தை உண்டாக்கும்.

கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு மனநிலை, நினைவாற்றல் மற்றும் தூக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது. தடையற்ற தூக்கத்தை தருகிறது.

இரவு தூக்க நேரத்தில் பால் சிறந்த துணை ஆகும். பாலில் மசித்த பாதாம், சிட்டிகை ஜாதிக்காய், சிட்டிகை ஏலக்காய் சேர்க்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சுவையான பானமும் கூட.

ஒரு கப் பாலில் கால் கப் தண்ணீர், 1 பல் பூண்டு சேர்த்து கலக்கவும். இது நன்றாக கொதிக்க வைத்து குடிக்கவும். செர்ரிப்பழங்கள் நல்ல தூக்கத்தை தூண்ட செய்கிறது.

இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காயுடன் தக்காளி சாற்றை எடுத்துகொள்ளலாம். தினமும் மதிய நேரத்தில் 4 அல்லது 5 மணி வாக்கில் இதை எடுத்துகொள்ளலாம்.

பால் மற்றும் தேன் கலவையானது தூக்கத்தை தூண்டுவதற்கு சிறந்தது. நீண்ட காலமாக இது நடைமுறையில் இருக்கும் பழக்கமும் கூட.

Read Previous

பூண்டு வெங்காயம் கெட்டிக் குழம்பு..!! சூடான சாதத்திற்கு செம டேஸ்டியான குழம்பு..!!

Read Next

ஆதார் கார்டு புதுப்பிப்பதில் சில மாற்றங்கள்..!! உடனே இத தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular