
இந்த நவீன காலத்தில் பல மக்கள் செய்யும் தவறான ஒரு விஷயம் தான் இரவு உணவை தாமதமாக உட்கொள்வது. காலை மதியம் இரவு ஆகிய வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் நாம் சாப்பிட வேண்டும். ஆனால் பலர் இதை பின்பற்றுவது இல்லை. அப்படி செய்வதனால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
நம்மில் பல பேர் இரவு உணவை பத்து மணிக்கு மேல் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இரவு 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி சாப்பிடுவதனால் செரிமானம் ஆவதற்கு நேரம் கிடைக்கிறது.
தாமதமாக உணவு சாப்பிடும் வேலையில் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் தூக்கம் சரியாக நமக்கு கிடைக்காது. ஆகையால் இரவு தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு நாம் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சர்க்கரை அளவு சரியாக இல்லாமல் நீரிழிவு போன்ற நோய்கள் நம்மை வந்து சேரும்.