இரைப்பை குடற் புண்களை நீக்கும் பிரண்டையின் மகத்துவத்தையும் மருத்துவத்தையும் தெரிந்து கொள்வோம்..!!

பிரண்டை கொடியை மடியில் கட்டிக் கொண்டால் பிள்ளை பிறக்கும் என்று பாட்டி வைத்தியம் கூறும், பிள்ளை பிறக்கிறதோ இல்லையோ குன்மம் எனப்படும் இரைப்பை குடற்புண் நோயில் ஏற்படும் வயிற்றறிவு வயிற்று வலியை பிரண்டை நீக்கும் என்பது உண்மை…

பிரண்டையின் குணத்தையோதிற் பித்தமாம் வாயுமந்தம் திரண்டமார் வலியே குன்மஞ் சேட்டுமஞ் சூலைவாதம் வெருண்ட நாய் நரி கடித்த விடம கோதரமே மூலம் உருண்டுபோ மற்று நோயு மோடுமென்றோதினரே, என்று பிரண்டையின் குணத்தை பார்த்த சிந்தாமணி எடுத்துக் கூறுகிறது வயிற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மூல நோய்களுக்கும் பிரண்டை அருமருந்தாக அமைகிறது வேலி ஓரங்களிலும் படர்ந்து கிடக்கும் பிரண்டையின் மருத்துவ பயனை பலரும் அறியாதிருப்பது வியப்பான விடயம், பிரண்டைத் தண்டை பச்சடி செய்து சாப்பிடலாம் பிரண்டை கொழுந்து ஒரு கை மிளகு 10 சீரகம் ஒரு தேக்கரண்டி வெந்தயம் அரை ஸ்பூன் செத்தல் மிளகாய் ஐந்து உப்பு தேவையானது கடுகு தேவையான அளவு பல புள்ளி தேவையான அளவு தேங்காய் ஒரு கைப்பிடி அளவு நல்லெண்ணெய் அல்லது நெய் ஒரு மேசை கரண்டி, காட்சியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம், மிளகு, சீரகம், மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும் பின் பிரண்டை குழந்தை போட்டு பொன்னிறமாக வதங்கி தேங்காய் பூவையும் உப்பையும் போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும் மிக்ஸியில் அல்லது அம்மியில் நன்கு அரைத்து புள்ளியையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குன்ம நோய் இழப்பை கொடுப்பும் வயிற்றுப் பொருமல் மூலரோகம் குடல் வாயு என் மனம் மாறும் இரைப்பை குடற்புண் உள்ளவர்கள் மூலநோய் உள்ளவர்கள் காரம் நீக்கி இதனை செய்து சாப்பிடலாம்..!!

Read Previous

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேற விரும்புகிறீர்களா வழிமுறைகள் இதோ..!!

Read Next

இரும்பலுக்கு இரண்டு மூலிகைகள் தூதுவளை மற்றும் மொசுமொசுக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular