இலவச சமையல் சிலிண்டர்: விண்ணப்பிப்பது எப்படி?.. முழு விவரங்களுடன்..!!

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியான பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பிபிஎல் பட்டியலில் பெயர் அச்சிடுதல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி நகல், வயது சான்றிதழ், மொபைல் எண் முதலியவற்றை பயன்படுத்தி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க http://www.pmuy.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் சென்று உஜ்வாலா யோஜனா 2.0 என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் பிற அனைத்து தகவல்களையும் டைப் செய்து இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Read Previous

பனங்கிழங்கு.. பொங்கலுக்கு அதிகமான அளவில் அறுவடை செய்யப்படும் பனங்கிழங்கு பற்றிய பதிவு..!!

Read Next

Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! பல்வேறு பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular