உங்கள் வீட்டை அழகாகவும் அதனை அழகு படுத்தவும் மேலும் வீட்டில் உள்ள காய்கறிகளை கையாளும் முறைகளையும் காண்போம்…
மெழுகுவர்த்திகளை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும், பாகற்காயை அப்படியே வைத்தால் ஓர் இரண்டு நாட்களில் பழுத்து விடும் இதை தவிர்க்க காய்களை மேற்புறம் அடிப்பிறும் வெட்டிவிட்டு இரண்டாகப் பிளந்து வைத்து விடவும் பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும், உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சு தேய்த்து ஃப்ரிட்ஜின் உள் முனையில் போட்டு விடுங்கள் இனி ஃப்ரிட்ஜை திறந்தால் ஒரே கமகமதான், ஊதுபத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணி வைக்கும் பீரோவில் போட்டு வைத்தால் பீரோவை திறக்கும் போது வாசனை வீசும், மிக்ஸியில் சட்னி மசாலா போன்றவை அரைத்து வலித்து எடுத்ததும் மீண்டும் சாரில் தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விடும். அதன் உள்ள கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கும் சட்டினி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம், துணிகளை துவைத்து முடித்து பின் கடைசியாக அலசும் போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்…!!




