அல்சர் விரைவில் குணமாகுவதற்கு எளிமையாக கையாள கூற வேண்டிய வீட்டு மருத்துவ முறை குறித்து பார்ப்போம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் மருத்துவர் நித்தியா பரிந்துரைத்துள்ளார்..
அல்சர் தொடர்பான பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது வயிற்றில் புண் சாப்பிட்ட உடன் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் அடிக்கடி பசி எடுத்தல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர்..
சித்த மருத்துவத்தை பொருத்தவரை எட்டு வகையான அல்சர் இருப்பதாக மருத்துவர் நித்தியா தெரிவித்துள்ளார் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக உடல் உஷ்ணத்தையும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் புண்களையும் ஆற்றக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக நீர்ச்சத்து இருக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் அதன்படி வெள்ளை பூசணிக்காய் சாப்பிடலாம். காலை நேரத்தில் வெள்ளை பூசணிக்காயை சாறு எடுத்து 100 மில்லி அளவிற்கு குடிக்கலாம். இதேபோல் அதிமதுரம் கசாயம் குடிக்கலாம் அரை ஸ்பூன் அதிமதுரத்துடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதை கொதிக்க வைத்து குடிக்கலாம் இந்த கஷாயம் வயிற்று பகுதியில் உள்ள புண்களை ஆற்றிவிடும். முக்கியமாக தினமும் இளநீர் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனை நீங்கும் என கூறப்படுகிறது குறிப்பாக இளநீருடன் நன்னாரி மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை ஊறவைத்து தண்ணீரை சேர்த்து குடிக்க வேண்டும் இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் அல்சர் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மருத்துவர் கூறுகிறார்..!!