
சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி செல்ல மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்த பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது அப்பா என்று திரையில் வர அந்த போனை கட் செய்து கொண்டே இருந்தார்…
ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுகிறார் பேசலாமே என்று நான் சொன்னேன் சும்மா எங்கிருக்க எங்க இருக்குன்னு கேட்டுட்டே இருக்காங்க என பதில் சொன்னார். அவரிடம் சொல்ல வேண்டுமென்று ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப தோன்றி கொண்டே இருந்தது. அப்பாவெல்லாம் பேசும் போதே பேசிவிடனும் பின்னால் பேசாமல் விட்டுவிடுவோம் என்று வருத்தப்பட்டு ஒரு பயனும் இல்லை என சொல்ல நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை காரணம் சிலவற்றின் அருமை இழந்த பின்பு தான் தெரியும் புரியும் என்பதனால் சொன்னால் யாருக்கும் புரியாது என்று அமைதியாகிவிட்டேன். சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது குறைந்தது ஐந்தாறு முறையாவது அப்பாவின் ஃபோனில் இருந்து அழைப்பு வந்துவிடும் பஸ் ஏறிட்டியா சாப்டியா மேல்மருவத்தூர் தாண்டிட்டியா சிதம்பரம் வந்துட்டியா என ஏதாவது ஒன்றைக் கேட்டு அழைத்துக் கொண்டே இருப்பார்.சரிப்பா வந்துடறேன் பா என்ற பதிலை ஒவ்வொரு அழைப்பிலும் சொல்லிக் கொண்டே இருப்பேன். இரவு பயணம் செய்தால் பேருந்து விடியற்காலையில் 4 மணிக்கு ஊரை நெருங்கும் அந்த நேரத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பேன் அதனாலேயே மயிலாடுதுறை வரைக்கும் சென்று டீ குடித்துவிட்டு விடிந்ததும் ஊருக்கு பஸ் ஏறுவேன் ஆனால் மிகச் சரியாக வைத்தீஸ்வரன் கோயிலை தாண்டியதுமே அப்பாவிடம் இருந்து அழைப்பு வரும் இறங்கப் போறியா தம்பி வர சொல்லட்டுமா என்று அரைத்தூக்கத்தில் தம்பியை எழுப்பி வண்டியை கொடுத்து அனுப்புவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும் நான் பேருந்து ஏறியதுமே அவரும் மனதளவில் என்னோடு பயணம் செய்து கொண்டிருந்தாரோ என்று தோன்றும் பகல் நேர பயணம் என்றால் இரவு எத்தனை மணி ஆனாலும் நான் வீட்டிற்கு வரும் வரை பிடித்திருப்பார் பேக்கை கழற்றி வைக்கும் போது துவைத்த லுங்கி கையில் தருவார் சாப்டுட்டு படு என்ற ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தான் படுக்கைக்கு செல்வார் மறுநாள் காலை எழுந்து தான் எல்லாவற்றையும் விசாரிப்பார் ஆனால் வீட்டிற்கு வந்து அரை நாளிலேயே எங்களுக்குள் ஏதோ ஒரு வாக்குவாதம் தொடங்கி விடும். வாடா வாடான்னு கூப்பிட்டு இப்படி சண்டை போடுவதற்கு தானா என்று கேட்பேன். நான் எது சொன்னாலும் நீ மறுத்து பேசுறியே என்பார் அப்பா அடுத்த சில நிமிடங்களில் எதையாவது பற்றி நானே பேச்சு கொடுப்பேன் அல்லது அவரே ஏதாவது பேசுவார் எந்த சண்டையுமே இருவருமே நீடிக்குவிட்டது கிடையாது வாக்குவாதங்கள் சண்டைகள் வெறும் நீர்க்குமிழிகள் ஆகவே எங்களுக்குள் இருந்தது. இந்த முறை மயிலாடுதுறை நெருங்க நெருங்க அப்பாவிடம் இருந்து அழைப்பு வருகிறதா என அனைச்சியாக ஃபோனை எடுத்துப் பார்த்து கொண்டேன் என்னை அறியாமலேயே அப்பா என் வயலில் டைப் செய்து பின் டெலிட் செய்தேன் வீட்டு வாசலில் நின்று வாப்பா நல்லா இருக்கியா என்று கேட்கும் அப்பாவின் குரலை கேட்க முடியவில்லை. பூச்சரம் போடப்பட்ட அப்பாவின் போட்டோவை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வருவது சொல்ல முடியாத பெருந்துயரம் மகன் பெண் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த பதிவு படித்து உணருங்கள் அப்பாவி தவற விடாதீர்கள் உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம் படித்ததில் பிடித்தது..!!