உங்களுக்கு ஞாபகம் மறதி அதிகமாக இருக்கிறதா..!! அப்போ உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம்..!!

இங்கு பல பேருக்கு ஞாபக மறதி நோய் நிச்சயமாக இருக்கும். சிறிய விஷயங்களாகினாலும் சரி பெரிய விஷயங்களாகினாலும் சரி மறப்பது நமது அன்றாட குணமாகவே மாறிவிட்டது. இதை நாம் சாதாரணமாக நினைத்து வருகிறோம். ஆனால் இது ஒரு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். அது என்ன நோய் மற்றும் அதைப்பற்றி இந்த பதிவில் காண்போம்.

நமது நினைவுகள் சிந்தனைகள் நடத்தை மொழி கற்றல் திறன் ஆகியவற்றை பாதிக்கும் நோய் தான் டிமென்ஷியா. வயது மூத்தவர்களிடம் இந்த நோய் அதிகமாக காணப்பட்டாலும் இதற்கும் வயதிற்கும் சம்பந்தம் கிடையாது. அன்றாட வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் பாதிப்பானது மூளையில் ஏற்பட்டு தற்போது டிமென்சியா என்ற நிலை ஏற்படும். உலக அளவில் பல லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது 60% முதல் 70% மக்களிடம் அல்சைமர் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இது என்னதான் மூளையை தாக்கும் பக்கவாதம் என்று கருதப்பட்டாலும் சில நாட்களுக்குப் பிறகு இவற்றின் உண்மையை அறிந்து கொள்கிறார்கள். இதன் அறிகுறிகளோ நமது பேசுதல் புரிதல் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் ஏற்படும் சிரமமும் ஞாபகம் வருவது குழப்பமும் தீர்வு எடுக்க முடியாத நிலையும் எழுதுதல் மற்றும் படிப்பதில் ஏற்படும் சிரமமும் தான்.

நாம் நன்றாக பழகிய விஷயங்களை மறப்பது அடிக்கடி சென்று வரும் வழிகளை மறப்பது பிறருக்கு அல்லது பிறரது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது மனக்கிழர்ச்சி போன்றவையும் இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. நமது மூளையில் இருக்கும் சில பகுதிகளில் ஏற்படும் மாற்றத்தினால் நியூரான்கள் இறந்துவிடும். அந்த பட்சத்தில் அதன் செயல்திறன்கள் நிறுத்தப்பட்டு டிமென்சியா ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Read Previous

பாசிப்பருப்பு சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இந்த இனிப்பை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular