அந்த நேரத்திலேயே தன்னை மாதிரி தானே தன் மனைவியும் வேலைக்கு போற அவளுக்கும் இந்த மன உளைச்சல் இருக்கும்னு அவருக்கு தோணல…
காதலிக்கிறப்போ இருந்த காதல் அல்லது நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு இருந்த காதல் எங்க போச்சு அப்படிங்கிற கேள்வி எல்லா திருமணமான பெண்களோட மனசுலேயும் இருக்கு. ஆண்களோட மனசுல இருந்த அந்த காதல் உண்மையிலேயே காணாமல் போகுதா என்பதை பற்றி ஒரு சம்பவம் வழியாக விளக்கப் போகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்..
பொதுவாக பெண்கள் தான் கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவருக்கு என் மேல் இருந்த காதலை போயிடுச்சுன்னு புகார் சொல்லுவாங்க ஆனா அந்த சம்பவத்துல ஒரு கணவர் தன் மனைவி மேல இவ கல்யாணத்துக்கு முன்னாடி என் மேல ரொம்ப லவ்வா இருந்தா ஆனா கல்யாணமான கொஞ்ச நாளிலேயே இவளுக்கு என் மேல இருந்த லவ் சுத்தமா போயிடுச்சு டாக்டர். ஆசை 60 நாள் மோகம் 30 நாளும் சொல்லுவாங்களே எங்க விஷயத்துல என் மனைவி அப்படி நடந்துக்கிறா செக்ஸ் வச்சுக்கவும் ஒத்துக்க மாட்டேங்குறா நான் கட்டாயப்படுத்தினால் கடமையேனு வச்சுக்கிறா. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த இவளோட லவ் எங்க போச்சுன்னு தெரியல டாக்டர் இப்படியே போய்கிட்டு இருந்தா டைவர்ஸ் வரைக்கும் போயிடுமோன்னு பயமா இருக்குன்னு அழுகாத குறையா பேசினார்…
கணவன் மனைவி பிரச்சினையை பொறுத்தவரைக்கும் ஒருத்தன் சொல்றத மட்டும் வச்சு நாங்க முடிவு எடுக்க மாட்டோம். அதனால உங்க மனைவி கிட்டயும் நான் பேசணும்னு சொன்னேன் கொஞ்சம் டைம் கொடுங்க டாக்டர் அப்படின்னு வெளியே போனவர் மறுபடியும் உள்ள வந்து அவரோட செல்போனை கொடுத்தார். அவரோட மனைவி தான் பேசினாங்க பல விஷயங்கள் அதுக்கு அப்புறம் தான் தெளிவாச்சி..
அந்த கணவன் லவ் பண்ணும் போது சின்சியராதான் இருந்திருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் சின்சியரா தான் இருக்கிறார். அந்த மனைவியும் அப்படி தான் கணவர் மேல ரொம்ப ரொம்ப காதலா இருக்காங்க இதுல எங்க பிரச்சனை வந்ததுன்னா கல்யாணத்துக்கு முன்னாடி காதலனா இருந்த அந்த ஆண் கல்யாணத்துக்கு பின்னாடி காதலனாகவோ கணவனாகவோ இல்லாமல் மேனேஜர் மாதிரி இருக்கார். ஆனால் அந்த மனைவி எப்பவும் போல கணவர் மேல காதலா மட்டும் இருந்திருக்காங்க..
காலைல ஆறு மணிக்கு எல்லாம் பூஜை அறையில் விளக்கு ஏத்தணும், வீட்டு வாசலை கூட்டி பெருக்க தாராளமா ஆள் வச்சுக்க ஆனால் கோலம் மட்டும் நீ போடணும்னு கல்யாணமான முதல் வாரத்திலேயே சொல்லி இருக்கிறார். அவரோட மனைவிக்கும் அவங்க பிறந்த வீட்ல காலையில அவங்க அம்மா விளக்கேத்தி பார்த்து பழக்கம் இருக்கிறதால சரின்னு சொல்லி இருக்காங்க. ஓவியா வரையறதுல ஆர்வம் இருக்கிறதால கோலம் போடறதுக்கும் சரின்னு சொல்லி இருக்காங்க ஒரு மாசம் எல்லாமே ஸ்மூத்தா தான் போயிருக்கு ஆனா அந்த மனைவியோட ஆபிஸ் ஆர்ட் குறைப்பு நடந்து அதனால் அவங்களோட வேலைப்பொருள் அதிகமானதால தினமும் நைட் லேட்டா வர ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சமைத்து சாப்பிட்டு தூங்க போக இன்னும் லேட்டாக இருக்கும் இதனால அவங்களால முதல் மாசம் செஞ்ச மாதிரி காலைல 6 மணிக்குள்ள குளிச்சு விளக்கு ஏத்த முடியல கோலம் போடவும் முடியல கொஞ்ச நாள் தன்னோட தூக்கத்தையும் கெடுத்துகிட்டு இந்த வேலையெல்லாம் கணவருக்காக செஞ்சிருக்காங்க ஆனா இதையெல்லாம் கண்டுக்காம வழக்கம் போல தான் தன் சந்தோசம் எட்டு மணி வரைக்கும் நிம்மதியான தூக்கமும் வழக்கம் போல தம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்திருக்கிறார்..
தினமும் சரியான தூக்கம் இல்லாததால் அந்த மனைவிக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டு இருக்கு இதனால் அவரோட வொர்க் லைப்பும் பாதிக்கப்பட்டு இருக்கு. இந்த டென்ஷன்ல வாஷிங்மெஷின்ல துணி போட மறக்கிறது பயன்படுத்தினால் தவளை பாத்ரூமிலேயே மறந்து வச்சிட்டு வருதுன்னு சில விஷயங்கள் செஞ்சிருக்காங்க மனைவியோட ஆபீஸ் பிரச்சனை இந்த கணவர் அந்த பிரஷர் தான் மனைவியை போட்டு அழுத்துதுன்னு புரிஞ்சுக்காம தானம் தான் பங்குக்கு நீ ஏன் வாஷிங்மெஷின்ல துணி போடல டவலை பாத்ரூம்ல ஏன் மறந்து வச்சுட்ட அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சிருக்காரு. இதுதான் ஒரு காதலன் கணவனா இருக்காமல் மேனேஜரா மாறுகிற தருணம்..
கணவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டி கிட்டே இருந்தா தன்னுடைய கரியரே போயிடும்னு புரிஞ்சுகிட்ட இவரோட மனைவி விளக்க இனிமே நீங்க ஏத்துங்க கோலத்தையும் கூட்டி பெருக்க வர அக்காவையே போட சொல்லி இருங்கன்னு சொல்லி இருக்காங்க. அதை செயலாலையும் காட்டி இருக்காங்க வருஷக் கணக்கா 8 மணி வரைக்கும் சொகுசா தூங்கிக்கிட்டு இருந்தவருக்கு ஆறு மணிக்குள்ள எந்திரிச்சு குளிச்சு விளக்கு ஏற்றுவது மன உளைச்சலை கொடுத்திருக்கு அந்த நேரத்திலையும் தன்னை மாதிரி தானே தன் மனைவியும் வேலை பார்க்கிறார் அவளுக்கும் இந்த மன உளைச்சல் இருந்திருக்கும் தானே அவருக்கு தோணல தொடர்ந்து மனைவியை குறை சொல்லிக்கிட்டே இருந்திருக்கிறார் விளைவு அவங்க ரொம்ப காதலிச்ச கணவர் கிட்ட கடமைக்கு வாழ ஆரம்பிச்சிருக்காங்க இதை இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
பல கணவர்கள் இந்த தப்பை செஞ்சுகிட்டு இருக்காங்க காதலி மனைவியா மாறுறாங்க அல்லது மனைவியா வர பெண்கள் மனைவியா மட்டும்தான் இருக்காங்க சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் பொறுத்து வரைக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் பெரும்பாலும் மேனேஜர்களாக அதாவது மனைவியை அதிகாரம் பண்ற மேனேஜர்களாக மாறிடுறாங்க இதுதான் இன்னைக்கு பல பேரோட தாம்பத்திய வாழ்க்கையில் மன உளைச்சலை கொடுத்துக்கிட்டு இருக்கு கணவர்கள் இதை புரிஞ்சிகிட்டால் எல்லோரோட திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்..!!