
உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற இந்த எளிய முறையை செய்து பாருங்கள்.
பொதுவாக சிலருக்கு குளிர்காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துகளை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனின் தேவையான அளவு உப்பு இட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த மூன்று எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்துவிட்டு தூங்குங்கள். நீங்கள் உறங்கிய பிறகு உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும். பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.