
உணவை மதியுங்கள்..!! உணவை வீணாக்காதீர்கள்..!! உணவை அன்னபூரணியாக மதியுங்கள்..!!
நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.
நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.
கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .
ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.
நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.
உணவை அன்னபூரணியாக மதியுங்கள்.